Saturday, May 11, 2013

ஆனந்தம் ஆனந்தம் பாடும் பெண் (சித்ரா) - பூவே உனக்காக

Anantham Anatham Padum (Chitra) From Poove Unakkaga.jpg


பாடல் பற்றிய விவரங்கள்

படம் : பூவே உனக்காக

இசைஅமைப்பாளர் : எஸ்.ஏ. ராஜ்குமார்

பாடியவர்கள் : சித்ரா

பாடலாசிரியர் : கவிஞர் பழனி பாரதி

வருடம் : 1996


ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்
காற்றினில் சாரல் போல பாடுவேன்
பூக்களை தென்றல் போல தேடுவேன்
நீ வரும் பாதையில் கண்களால் தவம் இருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்

உன்னை பார்த்த நாளில் தான் கண்ணில் பார்வை தோன்றியது
உந்தன் பேரை சொல்லி தான் எந்தன் பாஷை தோன்றியது
உன்னை மூடி வைக்கத்தான் கண்ணில் இமைகள் தோன்றியது
உன்னை சூடி பார்க்கத்தான் பூக்கள் மாலை ஆகியது
நீ என்னை சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை
நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை
பார்த்து பார்த்து ஏங்கிய சொந்தம் வாசல் வந்து சேர்ந்ததே 



ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்

உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்று போதாது
உன்னை எண்ணும் உள்ளத்தில் வேறு எண்ணம் தோன்றாது
காற்று நின்று போனாலும் காதல் நின்று போகாது
எங்கெங்கோ தேடிய வாழ்வை உன் சொந்தம் தந்தது இங்கே
சந்தங்கள் தேடிய வார்த்தை சங்கீதம் ஆனது இங்கே
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்
காற்றினில் சாரல் போல பாடுவேன்
பூக்களை தென்றல் போல தேடுவேன்
நீ வரும் பாதையில் கண்களால் தவம் இருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

12 comments:

அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்