Friday, September 14, 2012

பெண்கள் என்றால் பொய்யா

tamilpadapaadalvarigal.blogspot.com

பாடல் பற்றிய விவரங்கள்


இசைஅமைப்பாளர் : இளையராஜா

பாடியவர்கள் : யுவன் ஷங்கர் ராஜா


வருடம் : 2012

பெண்கள் என்றால் பொய்யா பொய் தானா
பெண்ணின் காதல் கண்ணின் மை தானா
பெண்கள் என்றால் பொய்யா பொய் தானா
பெண்ணின் காதல் கண்ணின் மை தானா
பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் தூங்கிடும் பனித் துளி
காலை வெயில் வந்தாலே
ஓடிப் போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே ஹோ ஹோ
கண்ணீர் வரும் பின்னாலே ஹோ ஹோ
என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில் தாவுதடி கூத்தாடி

பெண்கள் என்றால் பொய்யா பொய் தானா
பெண்ணின் காதல் கண்ணின் மை தானா...

இதற்க்குத் தானா ஆசை வைத்தாய்
இதயம் கேட்குதே
இவளுக்காக துடிக்க வேண்டாம்
என்று வெறுக்குதே
மதி கெட்ட என்னிடம்
மனம் நொந்து சொன்னது
மரணத்தை போல் இந்த
பெண் இவள் என்றது
தீயை போன்ற பெண் இவள் என்று
தெரிந்து கொண்டதே என் மனம்
அன்பு செய்த அயுதங்கள்
பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்

பெண்கள் என்றால் பொய்யா பொய் தானா
பெண்ணின் காதல் கண்ணின் மை தானா
பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் தூங்கிடும் பனித் துளி
காலை வெயில் வந்தாலே
ஓடிப் போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே ஹோ ஹோ
கண்ணீர் வரும் பின்னாலே ஹோ ஹோ
என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில் தாவுதடி கூத்தாடி
தாரத் தாரத் தாரத் தா

No comments:

Post a Comment

அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்