Showing posts with label காதல் சோக பாடல்கள். Show all posts
Showing posts with label காதல் சோக பாடல்கள். Show all posts

Monday, January 7, 2013

உயிரே உயிரே பிரியாதே பாடல்


உயிரே உயிரே பிரியாதே பாடல் வரிகள்

பாடல் பற்றிய விவரங்கள்


இசைஅமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பாடியவர்கள் : சாகர்


வருடம் : 2008

உயிரே உயிரே பிரியாதே

உயிரை தூக்கி எறியாதே 
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே 
ஹோ

கனவே கனவே கலையாதே 

கண்ணீர் துளியில் கரையாதே 
நீ இல்லாமல் இரவே விடியாதே 
ஹோ

பெண்ணே நீ வரும் முன்னே 

ஒரு பொம்மை போலே இருந்தேன் 
புன்னகையாலே முகவரி தந்தாயே 

ஆயுள் முழுதும் அன்பே 

உன் அருகில் வாழ்ந்திட நினைதேன் 
அறை நொடி மின்னல் போலே சென்றாயே

உயிரே உயிரே பிரியாதே 

உயிரை தூக்கி எறியாதே 
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே 
ஹோ

புல் மேல் வாழும் 

பனி தான் காய்ந்தாலும் 
தலை மேல் தாங்கிய நேரம் 
கொஞ்சம் ஆனால் பொற்காலம்

உன் அருகாமை 

அதை நான் இழந்தாலும் 
சேர்ந்தே வாழ்ந்த 
ஒவ்வொரு நொடியின் 
நினைவே சந்தோஷம்

கடல் மூழ்கிய தீவுகளை 

கண் பார்வைகள் அறிவதில்லை 
அது போலே உன்னில் மூழ்கிவிட்டேன்

உயிரே உயிரே பிரியாதே 

உயிரை தூக்கி எறியாதே 
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே 
ஹோ

உன் கை கோர்த்து 

அடி நான் சென்ற இடம் 
தன்னந்தனியாய் எங்கே வந்தாய் 
என்றே கேட்கிறதே

உன் தோள் சாய்ந்து 

அடி நான் நின்ற மரம் 
நிழலை எல்லாம் சுருட்டி கொண்டு 
நெருப்பாய் எரிகிறதே

நிழல் நம்பிடும் என் தனிமை 

உடல் நம்பிடும் உன் பிரிவை 
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே

உயிரே உயிரே பிரியாதே 

உயிரை தூக்கி எறியாதே 
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதஎ 
ஹோ

கனவே கனவே கலையாதே 

கண்ணீர்த் துளியில் கரையாதே 
நீ இல்லாமல் இரவே விடியாதே 

Wednesday, October 31, 2012

கடவுள் வாழும் கோவிலிலே



கடவுள் வாழும் கோவிலிலே

பாடல் பற்றிய விவரங்கள்


இசைஅமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடியவர்கள் : பி.ஜெயசந்திரன்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

வருடம் : 1980

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம்
கலை இழந்த மாடத்திலே முகாறி ராகம்..முகாறி ராகம்
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம்

முந்தாணை பார்த்து முன்னூறு கவிதை
என்னாளும் எழுதும் கவிஞர்கள் கோடி
முந்தாணை பார்த்து முன்னூறு கவிதை
என்னாளும் எழுதும் கவிஞர்கள் கோடி
முன்னாடி அறியா பெண்மனதை கேட்டு
அன்புண்டு வாழும் காளையர் கோடி
ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்

கடவுள் வாழும்………

கிணத்துக்குள் வாழும் தவளையை போல
மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி
கிணத்துக்குள் வாழும் தவளையை போல
மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி
கண்கெட்ட பின்னே சூரிய உதயம் எந்தபக்கம்
ஆனால் எனக்கென்ன போடி
ஒருதலை ராகம் எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்
கடவுள் வாழும்………….


Sunday, September 23, 2012

காதல் ரோஜாவே - ரோஜா பட பாடல் வரிகள்



காதல் ரோஜாவே பாடல் வரிகள்

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : ரோஜா

இசைஅமைப்பாளர் : .ஆர்.ரஹ்மான்


பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து

வருடம் : 1992

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே (2)
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்
சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டும் சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால் வார்த்தை இல்லை கண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கை இல்லை கண்ணே
முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

வீசுகின்ற தென்றலே வேலை இல்லை நின்று போ
பேசுகின்ற வென்னிலா பெண்மை இல்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்தல் இல்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புல்லியாகத் தேய்ந்து போ
பாவை இல்லை பாவை தேவை என்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

Friday, September 14, 2012

முதல் முறை பார்த்த ஞாபகம்


முதல் முறை பார்த்த ஞாபகம்
நீதானே என் பொன்வசந்தம்

பாடல் பற்றிய விவரங்கள்


இசைஅமைப்பாளர் : இளையராஜா

பாடியவர்கள் : சுனிதி சௌகான்


வருடம் : 2012

முதல் முறை பார்த்த  ஞாபகம்
உன்நிழல் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலோ மழையோ
வலியோ சுகமோ எது நீ
நீதானே என் பொன் வசந்தம்
நீதானே என் பொன் வசந்தம்
வசந்தம் வசந்தம்

முதல் முறை  பார்த்த  ஞாபகம்
உன்நிழல் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்

நீந்தி வரும் நிலாவினிலே ஓர் ஆயிரம் ஞாபகங்கள்
நீண்ட நெடும் கனாவினிலே நூறாயிரம் தீ அலைகள்
நெஞ்சம் எழும் வினாக்களுக்கு
என் பதில் என்ன பல வரிகள்
சேருமிடம் விலாசத்திலே  உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லை
தேடலில் நீ  வரும்  ஓசைகள்
அது போனது உன் தடம் இல்லை
காதல் என்றால் வெறும் காயங்களா
அது காதலிக்கு அடையாளங்களா

வெயிலோ மழையோ
வலியோ சுகமோ எது நீ
நீதானே என் பொன் வசந்தம்
நீதானே என் பொன் வசந்தம்
வசந்தம்  வசந்தம்

முதல் முறை  பார்த்த  ஞாபகம்
உன்நிழல் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலோ மழையோ
வலியோ சுகமோ எது நீ
நீதானே என் பொன் வசந்தம்
நீதானே என் பொன் வசந்தம்

பெண்கள் என்றால் பொய்யா

tamilpadapaadalvarigal.blogspot.com

பாடல் பற்றிய விவரங்கள்


இசைஅமைப்பாளர் : இளையராஜா

பாடியவர்கள் : யுவன் ஷங்கர் ராஜா


வருடம் : 2012

பெண்கள் என்றால் பொய்யா பொய் தானா
பெண்ணின் காதல் கண்ணின் மை தானா
பெண்கள் என்றால் பொய்யா பொய் தானா
பெண்ணின் காதல் கண்ணின் மை தானா
பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் தூங்கிடும் பனித் துளி
காலை வெயில் வந்தாலே
ஓடிப் போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே ஹோ ஹோ
கண்ணீர் வரும் பின்னாலே ஹோ ஹோ
என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில் தாவுதடி கூத்தாடி

பெண்கள் என்றால் பொய்யா பொய் தானா
பெண்ணின் காதல் கண்ணின் மை தானா...

இதற்க்குத் தானா ஆசை வைத்தாய்
இதயம் கேட்குதே
இவளுக்காக துடிக்க வேண்டாம்
என்று வெறுக்குதே
மதி கெட்ட என்னிடம்
மனம் நொந்து சொன்னது
மரணத்தை போல் இந்த
பெண் இவள் என்றது
தீயை போன்ற பெண் இவள் என்று
தெரிந்து கொண்டதே என் மனம்
அன்பு செய்த அயுதங்கள்
பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்

பெண்கள் என்றால் பொய்யா பொய் தானா
பெண்ணின் காதல் கண்ணின் மை தானா
பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் தூங்கிடும் பனித் துளி
காலை வெயில் வந்தாலே
ஓடிப் போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே ஹோ ஹோ
கண்ணீர் வரும் பின்னாலே ஹோ ஹோ
என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில் தாவுதடி கூத்தாடி
தாரத் தாரத் தாரத் தா

Tuesday, August 28, 2012

யம்மா யம்மா காதல் பொன்னம்மா

yamma yamma song lyrics in tamil font

பாடல் பற்றிய விவரங்கள்


இசைஅமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்


பாடலாசிரியர் : கவிஞர் கபிலன்

வருடம் : 2011

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேகை போல
பெண்ணோட காதல் கைக்குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாலே
என் மூச்சு காத்த வாங்கி போனாளே

பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்

அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முல்லுடா
அத கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திரை
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை
ஓட்ட போட்ட முங்கில் அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்
வந்து போனதாரு ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போனேன் பாரு அவ பூவு இல்ல நாரு

என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல நெருடாதே
மனம் தாங்காதே தாங்காதே

வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்னை கண்ணைக்கட்டி கூட்டி போங்கடா


Friday, August 10, 2012

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு


uyire uyire vandhu song lyrics in tamil font

பாடல் பற்றிய விவரங்கள்

படம் :  பாம்பே
                
இசைஅமைப்பாளர் : ஆர்ரஹ்மான்

பாடியவர்கள் :  ஹரிஹரன்கே. எஸ். சித்ரா

பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து

வருடம் : 1995


உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு 
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு 
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு 

என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு  
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் 
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்