Monday, October 15, 2012

இன்னிசை பாடிவரும் (ஆண்)




பாடல் பற்றிய விவரங்கள்


இசைஅமைப்பாளர் : எஸ்..ராஜ்குமார்

பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்

பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து

வருடம் : 1999
 இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிறதே

(
இன்னிசை)

கண் இல்லையென்றாலும் நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்க முடியாது
குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால் கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே

(
இன்னிசை)

உயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களோ மிக ரகசியமானது
ரகசியம் காண்பதோ மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போல தேடல் கூட ஒரு சுகமே

(
இன்னிசை)


1 comment:

  1. மிகவும் பிடித்த பாடல்...

    அடிக்கடி பாடும் பாடலும் கூட... (மனதில்)

    நன்றி...

    ReplyDelete

அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்