Monday, January 7, 2013

உயிரே உயிரே பிரியாதே பாடல்


உயிரே உயிரே பிரியாதே பாடல் வரிகள்

பாடல் பற்றிய விவரங்கள்


இசைஅமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பாடியவர்கள் : சாகர்


வருடம் : 2008

உயிரே உயிரே பிரியாதே

உயிரை தூக்கி எறியாதே 
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே 
ஹோ

கனவே கனவே கலையாதே 

கண்ணீர் துளியில் கரையாதே 
நீ இல்லாமல் இரவே விடியாதே 
ஹோ

பெண்ணே நீ வரும் முன்னே 

ஒரு பொம்மை போலே இருந்தேன் 
புன்னகையாலே முகவரி தந்தாயே 

ஆயுள் முழுதும் அன்பே 

உன் அருகில் வாழ்ந்திட நினைதேன் 
அறை நொடி மின்னல் போலே சென்றாயே

உயிரே உயிரே பிரியாதே 

உயிரை தூக்கி எறியாதே 
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே 
ஹோ

புல் மேல் வாழும் 

பனி தான் காய்ந்தாலும் 
தலை மேல் தாங்கிய நேரம் 
கொஞ்சம் ஆனால் பொற்காலம்

உன் அருகாமை 

அதை நான் இழந்தாலும் 
சேர்ந்தே வாழ்ந்த 
ஒவ்வொரு நொடியின் 
நினைவே சந்தோஷம்

கடல் மூழ்கிய தீவுகளை 

கண் பார்வைகள் அறிவதில்லை 
அது போலே உன்னில் மூழ்கிவிட்டேன்

உயிரே உயிரே பிரியாதே 

உயிரை தூக்கி எறியாதே 
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே 
ஹோ

உன் கை கோர்த்து 

அடி நான் சென்ற இடம் 
தன்னந்தனியாய் எங்கே வந்தாய் 
என்றே கேட்கிறதே

உன் தோள் சாய்ந்து 

அடி நான் நின்ற மரம் 
நிழலை எல்லாம் சுருட்டி கொண்டு 
நெருப்பாய் எரிகிறதே

நிழல் நம்பிடும் என் தனிமை 

உடல் நம்பிடும் உன் பிரிவை 
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே

உயிரே உயிரே பிரியாதே 

உயிரை தூக்கி எறியாதே 
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதஎ 
ஹோ

கனவே கனவே கலையாதே 

கண்ணீர்த் துளியில் கரையாதே 
நீ இல்லாமல் இரவே விடியாதே 

No comments:

Post a Comment

அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்