Wednesday, October 10, 2012

பூவே உனக்காக - ஆனந்தம் ஆனந்தம் பாடும்




பாடல் பற்றிய விவரங்கள்


இசைஅமைப்பாளர் : எஸ்.. ராஜ்குமார்

பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்

பாடலாசிரியர் : கவிஞர் பழனி பாரதி

வருடம் : 1996

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் (2)

ஆயிரம் ஆயிரம் காலம் இந்த நியாபகம் பூ மழை தூவும்
காற்றினில் சாரல் போல பாடுவேன்
காதலை பாடி பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது
சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்
உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்திட வேண்டும்
பூவே உன் புன்னகை என்றும் சந்தோசம் தந்திட வேண்டும்
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

இன்னும் நூறு ஜென்மங்கள் சேர வேண்டும் சொந்தங்கள்
காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்
தென் பொதிகை சந்தன காற்று உன் வாசல் வந்திட வேண்டும்
ஆகாய கங்கைகள் வந்து உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம் இந்த நியாபகம் பூ மழை தூவும்
காற்றினில் சாரல் போல பாடுவேன்
காதலை பாடி பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம் இந்த நியாபகம் பூ மழை தூவும்

2 comments:

அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்