Showing posts with label பூவே உனக்காக. Show all posts
Showing posts with label பூவே உனக்காக. Show all posts

Saturday, May 11, 2013

ஆனந்தம் ஆனந்தம் பாடும் பெண் (சித்ரா) - பூவே உனக்காக

Anantham Anatham Padum (Chitra) From Poove Unakkaga.jpg


பாடல் பற்றிய விவரங்கள்

படம் : பூவே உனக்காக

இசைஅமைப்பாளர் : எஸ்.ஏ. ராஜ்குமார்

பாடியவர்கள் : சித்ரா

பாடலாசிரியர் : கவிஞர் பழனி பாரதி

வருடம் : 1996


ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்
காற்றினில் சாரல் போல பாடுவேன்
பூக்களை தென்றல் போல தேடுவேன்
நீ வரும் பாதையில் கண்களால் தவம் இருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்

உன்னை பார்த்த நாளில் தான் கண்ணில் பார்வை தோன்றியது
உந்தன் பேரை சொல்லி தான் எந்தன் பாஷை தோன்றியது
உன்னை மூடி வைக்கத்தான் கண்ணில் இமைகள் தோன்றியது
உன்னை சூடி பார்க்கத்தான் பூக்கள் மாலை ஆகியது
நீ என்னை சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை
நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை
பார்த்து பார்த்து ஏங்கிய சொந்தம் வாசல் வந்து சேர்ந்ததே 



ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்

உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்று போதாது
உன்னை எண்ணும் உள்ளத்தில் வேறு எண்ணம் தோன்றாது
காற்று நின்று போனாலும் காதல் நின்று போகாது
எங்கெங்கோ தேடிய வாழ்வை உன் சொந்தம் தந்தது இங்கே
சந்தங்கள் தேடிய வார்த்தை சங்கீதம் ஆனது இங்கே
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்
காற்றினில் சாரல் போல பாடுவேன்
பூக்களை தென்றல் போல தேடுவேன்
நீ வரும் பாதையில் கண்களால் தவம் இருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

Wednesday, October 10, 2012

பூவே உனக்காக - சொல்லாமலே



sollamale song lyrics.jpg

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : பூவே உனக்காக

இசைஅமைப்பாளர் : எஸ்.. ராஜ்குமார்

பாடியவர்கள் : சுஜாதா, பி.ஜெயசந்திரன்

பாடலாசிரியர் : கவிஞர் பழனி பாரதி

வருடம் : 1996

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது (2)

மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா
வெட்கத்தை தொட்டு தொட்டு
காதல் சொல்லும் பச்சை கிளி
மொட்டுக்குள் என்ன சத்தம்
மெல்ல வந்து சொல்லடி
சொல்லாமலே யார் பார்த்தது

மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சு மெத்தை முள்ளை போல குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டிணங்கள் சுற்றுகின்றது
அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே நீ முந்தானை காதல் வலையா
உன் பார்வை குற்றாலச் சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மீட்டும் பொன் வீணை எந்தன் இடையா
இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி
உன்னோடுதான்….
நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குள் தீயை போல
பற்றிக்கொள்ளு கண்மணி

சொல்லாமலே யார் பார்த்தது

கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
சுக சொப்பணங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது
என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளி சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது
அன்பே நான் என்னாளும் உன்னை நினைத்து
முள் மீது பூவானேன் தேகம் இளைத்து
வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாத சந்தோச யுத்தம் நடத்து
உலக அதிசயத்தில் ஒன்று கூடியது
நம் காதலா
நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குள் தீயை போல
பற்றிக்கொள்ளு கண்மணி

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா
சொல்லாமலே யார் பார்த்தது

பூவே உனக்காக - ஆனந்தம் ஆனந்தம் பாடும்




பாடல் பற்றிய விவரங்கள்


இசைஅமைப்பாளர் : எஸ்.. ராஜ்குமார்

பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்

பாடலாசிரியர் : கவிஞர் பழனி பாரதி

வருடம் : 1996

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் (2)

ஆயிரம் ஆயிரம் காலம் இந்த நியாபகம் பூ மழை தூவும்
காற்றினில் சாரல் போல பாடுவேன்
காதலை பாடி பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது
சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்
உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்திட வேண்டும்
பூவே உன் புன்னகை என்றும் சந்தோசம் தந்திட வேண்டும்
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

இன்னும் நூறு ஜென்மங்கள் சேர வேண்டும் சொந்தங்கள்
காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்
தென் பொதிகை சந்தன காற்று உன் வாசல் வந்திட வேண்டும்
ஆகாய கங்கைகள் வந்து உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம் இந்த நியாபகம் பூ மழை தூவும்
காற்றினில் சாரல் போல பாடுவேன்
காதலை பாடி பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம் இந்த நியாபகம் பூ மழை தூவும்