Showing posts with label ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள். Show all posts
Showing posts with label ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள். Show all posts

Friday, September 28, 2012

ருக்கு மணி - ரோஜா



rukkumani rukkumani.jpg

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : ரோஜா

இசைஅமைப்பாளர் : .ஆர்.ரஹ்மான்

பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து

வருடம் : 1992

ருக்கு மணி ருக்கு மணி
அக்கம் பக்கம் என்ன சத்தம்
காது ரெண்டும் கூசுதடி
கண்டு பிடி என்ன சத்தம்

ருக்கு மணி ருக்கு மணி
அக்கம் பக்கம் என்ன சத்தம்
காது ரெண்டும் கூசுதடி
கண்டு பிடி என்ன சத்தம்

கட்டி கொண்ட ஆணும் பெண்னும்
தொட்டு தரும் முத்த சத்தம்
கட்டில் ஒன்னு விட்டு விட்டு
மெட்டு கட்டும் இன்ப சத்தம்
சேவல் ஒன்னு கூவாம
தீராது இந்த சத்தம்

ருக்கு மணி ருக்கு மணி
அக்கம் பக்கம் என்ன சத்தம்
காது ரெண்டும் கூசுதடி
கண்டு பிடி என்ன சத்தம்

சின்னஞ்சிறு பொண்ணுக்கு
ஆசை ரொம்ப இருக்கு

சீனிக்குள்ள எறும்பு
மாட்டிக்கிட்டு கணக்கு

எட்டு மேல எட்டு வச்சு
கட்டில் வரை நெருங்க

முத்து மணி கொலுசுங்க
முத்தம் கேட்டு சிணுங்க

உள்ள பூ பூக்குது
அடி உச்சி ஏன் வேர்க்குது

ஆசை பாய் போட்டது
அட அச்சம் தாழ் போட்டது

ருக்கு மணி ருக்கு மணி
அக்கம் பக்கம் என்ன சத்தம்
காது ரெண்டும் கூசுதடி
கண்டு பிடி என்ன சத்தம்

சொந்தம் கொண்ட புருஷன்
சுண்டு விரல் பிடிக்க

சுண்டு விரல் தொட்டதும்
அந்த இடம் சிலிர்க்க

காமதேவன் மண்டபத்தில்
கச்சேரியும் நடக்க

கன்னிமகள் வளையலும்
பின்னணிகள் இசைக்க

முத்தம் பந்தாடுது
உயிர் மொத்தம் திண்டாடுது

சித்தம் சூடேருது
இந்த ஜென்மம் ஈடேருது

ருக்கு மணி ருக்கு மணி
அக்கம் பக்கம் என்ன சத்தம்
காது ரெண்டும் கூசுதடி
கண்டு பிடி என்ன சத்தம்

Wednesday, September 26, 2012

சின்ன சின்ன ஆசை - ரோஜா பட பாடல் வரிகள்



சின்ன சின்ன ஆசை பாடல் வரிகள்

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : ரோஜா

இசைஅமைப்பாளர் : .ஆர்.ரஹ்மான்

பாடியவர்கள் : மின்மினி, .ஆர்.ரஹ்மான்

பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து

வருடம் : 1992

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை

(
சின்ன)

மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை
கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை

(
சின்ன)

சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை

(
சின்ன)

Monday, September 24, 2012

புது வெள்ளை மழை - ரோஜா பட பாடல் வரிகள்



pudhu vellai mazhai song

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : ரோஜா

இசைஅமைப்பாளர் :  .ஆர்.ரஹ்மான்

பாடியவர்கள் : உன்னி மேனன், சுஜாதா

பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து

வருடம் : 1992

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது?

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ?
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ?

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

Sunday, September 23, 2012

காதல் ரோஜாவே - ரோஜா பட பாடல் வரிகள்



காதல் ரோஜாவே பாடல் வரிகள்

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : ரோஜா

இசைஅமைப்பாளர் : .ஆர்.ரஹ்மான்


பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து

வருடம் : 1992

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே (2)
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்
சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டும் சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால் வார்த்தை இல்லை கண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கை இல்லை கண்ணே
முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

வீசுகின்ற தென்றலே வேலை இல்லை நின்று போ
பேசுகின்ற வென்னிலா பெண்மை இல்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்தல் இல்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புல்லியாகத் தேய்ந்து போ
பாவை இல்லை பாவை தேவை என்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

தமிழா தமிழா - ரோஜா பட பாடல் வரிகள்



தமிழா தமிழா

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : ரோஜா

இசைஅமைப்பாளர் : .ஆர்.ரஹ்மான்

பாடியவர்கள் : ஹரிஹரன்

பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து

வருடம் : 1992

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே (2)

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது...

Friday, September 14, 2012

முதல் முறை பார்த்த ஞாபகம்


முதல் முறை பார்த்த ஞாபகம்
நீதானே என் பொன்வசந்தம்

பாடல் பற்றிய விவரங்கள்


இசைஅமைப்பாளர் : இளையராஜா

பாடியவர்கள் : சுனிதி சௌகான்


வருடம் : 2012

முதல் முறை பார்த்த  ஞாபகம்
உன்நிழல் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலோ மழையோ
வலியோ சுகமோ எது நீ
நீதானே என் பொன் வசந்தம்
நீதானே என் பொன் வசந்தம்
வசந்தம் வசந்தம்

முதல் முறை  பார்த்த  ஞாபகம்
உன்நிழல் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்

நீந்தி வரும் நிலாவினிலே ஓர் ஆயிரம் ஞாபகங்கள்
நீண்ட நெடும் கனாவினிலே நூறாயிரம் தீ அலைகள்
நெஞ்சம் எழும் வினாக்களுக்கு
என் பதில் என்ன பல வரிகள்
சேருமிடம் விலாசத்திலே  உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லை
தேடலில் நீ  வரும்  ஓசைகள்
அது போனது உன் தடம் இல்லை
காதல் என்றால் வெறும் காயங்களா
அது காதலிக்கு அடையாளங்களா

வெயிலோ மழையோ
வலியோ சுகமோ எது நீ
நீதானே என் பொன் வசந்தம்
நீதானே என் பொன் வசந்தம்
வசந்தம்  வசந்தம்

முதல் முறை  பார்த்த  ஞாபகம்
உன்நிழல் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலோ மழையோ
வலியோ சுகமோ எது நீ
நீதானே என் பொன் வசந்தம்
நீதானே என் பொன் வசந்தம்

Saturday, August 11, 2012

மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது


bombay movie songs lyrics in tamil font

பாடல் பற்றிய விவரங்கள்

படம் :  பாம்பே
                
இசைஅமைப்பாளர் : ஆர்ரஹ்மான்

பாடியவர்கள் :  சுஜாதா, கோரஸ்

பாடலாசிரியர் : கவிஞர்.வைரமுத்து

வருடம் : 1995


மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும் - தேசம்
மலர் மீது துயில் கொள்ளட்டும்

மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும் - தேசம்
மலர் மீது துயில் கொள்ளட்டும்

வழிகின்ற கண்ணீரில் நிரமில்லையே உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
வழிகின்ற கண்ணீரில் நிரமில்லையே உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே

காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை மனதோடு மனம் சேரட்டும்

மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும் - தேசம்
மலர் மீது துயில் கொள்ளட்டும்

புவியெல்லாம்கை கோர்த்து கடலாகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்

புகை எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்
விண்ணோடு வின் சேரட்டும்

விடியாத இரவொன்றும் வானில் இல்லை
ஒளியோடு ஒழி சேரட்டும்

பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு


bombay movie songs lyrics in tamil font

பாடல் பற்றிய விவரங்கள்

படம் :  பாம்பே
                
இசைஅமைப்பாளர் : ஆர்ரஹ்மான்

பாடியவர்கள் :  நோவேல் ஜேம்ஸ்ஆர்ரஹ்மான்மால்குடி சுபாஅனுபமா

பாடலாசிரியர் : கவிஞர் வாலி

வருடம் : 1995
 
பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு
குல்லா குல்லா ஹல்லா குல்லா
வானும் மண்ணும் யாருக்கு
நீயும் நானும் யாருக்கு?
குல்லா குல்லா ஹல்லா குல்லா

நீ சிரிச்சா தீவானா
கைக்கொடுத்தா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா
நீயும் நானும் ஒன்னான்னா
ரூப்பு தேரா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

சோலைக்கு என்ன ஒரு கவலை?
எப்போதும் பரவைகள் அழுவதில்லை
சூரியனில் என்றும் இரவு இல்லை
எப்போதும் சொர்க்கத்துக்கு தடையில்லை
குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதுக்கு இல்லை
பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை
(நீ சிரிச்சா..)

பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
வெல்லத்தானே வீரம் கொல்வதற்க்கு இல்லை
கையோடு கைசேர்த்து வானத்தையே தொட்டுவிடு

குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதுக்கு இல்லை
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
வெல்லத்தானே வீரம் கொல்வதற்க்கு இல்லை
(நீ சிரிச்சா..)